Wednesday, 9 November 2016

Currency notes demonetised

Shri Narendra Modi announced today that from midnight tomorrow (9 Oct 2016 00:00 Hours) the 500 and 1000 rupees notes were made illegal to tender.

Even people who possess a few currency notes are panicking. This is because they have their heart are on their worldly treasures.

As Jesus said, store up treasures in the heaven.

This decision has come  suddenly and taken many by surprise. This shows that decisions can be forced by the government at their whim and can make people to bend to their policies.

We all know that the beast will enforce that the people who don't have his mark of 666 cannot do trade.

These occurences are of prophetic significance of the return of our redeemer Jesus.

Come Lord Jesus! Come soon. Amen

செல்லாத நோட்டுக்கள்

இன்றிரவு (8 Oct 2016) 12 மணி முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று திரு நரேந்திர மோடி அறிவிப்பு.

இதன் காரணமாக மிகவும் நெருக்கடியான நிலையில் பல மக்கள் உள்ளனர். சில கரன்சி நோட்டுக்களை வைத்துள்ள மக்களும் பதற்றமாக இருக்க காரணம், அவர்களின் இருதயம் அவர்களின் பொக்கிஷம் இருக்கும் இடத்தில் உள்ளது.

இயேசு கிறிஸ்து சொன்ன படியே, பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள்.

இந்த முடிவு சடுதியில் வந்ததென மக்கள் கூறுகின்றனர். முடிவுகள் சடுதியில் வரக்கூடியதென்று இந்த நிகழ்வைக் கொண்டு அறியலாம்.

காலம் மிக விரைவில் வருகிறது மக்களே.... பிசாசின் முத்திரையான 666 என்ற இலக்கத்தை ஒப்புக் கொள்ளாதவன் வணிகம் செய்ய முடியாது என்ற நிலை வரும் என்று நம் வேதாகமத்தில் உள்ளது.

தேவன் உங்களையும் என்னையும் முன்குறித்து இரகசியங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். முன்குறிக்கப்பட்டும் சத்தியம் அறியாத மக்கள், சத்தியம் அறியும்படி நாம் ஜெபித்து, அவர்களுக்கு ஆவியானவர் வழிநடத்தும் படியே கீழ்படிந்து அவர்களுக்கு சத்தியத்தை அறிவியுங்கள். இவையெல்லாம் நம் மீட்பர்  விரைவில் திரும்ப   வருவதற்கான அறிகுறிகள்.

வாரும் இயேசுவே. விரைவில் வாரும். ஆமென்.

Tuesday, 8 November 2016

Christ Jesus life - Part 7

Do you speak what others want to hear?

Are you speaking what others want to hear? If you are leading such as life, wherein you speak to people what they want to hear, you are leading a life of hypocrisy.

What's the difference between a yesmen who does flattery? No difference.

Jesus did not flatter anyone. We see in scriptures he said, woe to you Pharisees. Even before the governor, Pilate, when Pilate was threatening him "Don't you know I have the authority to put you on the cross?" he replied "Unless it is granted from above you have no authority over me!"

Worthless Servants

Pastors and Ministers of God must closely understand Jesus lifestyle and lead a life just like him.

Let us make a simulation

Holy Spirit makes you to walk on a specific road. On that road you come across a car, which is clearly a government head's convoy. Holy Spirit commissions you to get into the car and preach Gospel. Will you do?

If you do, you are doing the will of God.

Now read Acts 8:25-40. Philip did the will of God. Ethiopian Eunuch was saved. He did not ask, "How can I get into a governors convoy? The soldiers gaurding the convoy would kill me?" He didn not find a lame reason

Jesus says "Without me you can do nothing"

Do you still say, I accomplished, I went there, I preached, I ministered, I evangelised? Changed that I in these statements. Whatever LORD leads you to do, only those things complete them. And then say "We have completed all the commands, your worthless servants LORD"

Let us remember the grace LORD has showered on us daily.

Christ Jesus life - Part 6

Sermon and God's people

Holy Spirit when he delivers sermon through me, often says "You should grasp God's word and understand. It should not be let go as a Bouncer ball ducked by batsman during a Cricket match" During worship time if you are uanble to understand the meaning of  the sermon, sit with the LORD in your personal prayer to get the understanding.

If you duck and leave it as bouncer, whose loss is it? Isn't it like the seeds that were strewn by way side and eaten by birds? For what reason Sermon is there in congregation? Isn't it for the God's people to understand the word of God and utilise it?

One can take only one verse and preach for days. Also in one sermon there can be many scripture references. Preachers, it is not important how you preach. It is important that the people who hear the preaching are benefitted from the sermon. Does the Holy Spirit preach, or your flesh preach?

Jesus during his ministry has told same teachings in 2 or 3 places. However these were delivered for the benefit of people who were there. He did not preach about the same thing to different people in same day. He understood the needs of the people and delivered his sermons. In some places directly and in many places with Parables.

Holy Spirit knows the needs of the people coming to that service. In each worship understanding the need of the people from the Holy Spirit and preaching it is the right way. If a preacher does that, they are doing the will of God. Other sermons will go as bouncers. For this reason I am not in agreement with one sermon for many worship services in a day.

In all the worship time, don;t follow it as a law to preach. Sometimes utilise the time to sing and praise the LORD.

Recently Holy Spirit led me to a church for an evening service. When I arrived the service did not start and I saw the congregation members in prayer. I saw the Church Pastor getting ready for preaching.

I also gave myself to Holy Spirit and started praying. Holy Spirit revealed me something and asked me to tell to the Pastor.  I obeyed the LORD and said what Holy Spirit revealed me. He was little surpised. If Holy Spirit leads like this some may not obey stating that "What if the Pastor thinks who is this fellow to come and say LORD told me this?"

On that day, I obeyed

After few minutes the worship starts. After the worship the sermon heading was much related to what Holy Spirit revealed me and asked me to tell the Pastor. So preachers should be very careful what Jesus wants to preach to the people. When the Spirit of God takes over a sermon, the words become imperishable seed.

May the LORD teach you and lead you further. Amen

Christ Jesus Life - Part 5


Parables in teachings of Jesus

It is written in the gospels that Jesus had preached his teachings predominantly to his Disciples. Nicodemus, the Pharisee who met Jesus privately, is one of the few who heard his teachings and not part of his disciples group.

Both in the Mount sermon recorded in the gospel according to Matthew and the Plains sermon recorded in the Gospel according to Luke, we can observe that Jesus had spoken to his Disciples. Read Matt 5:1-2 and Luke 6:20

When he spoke to the multitude, he spoke in Parables. Why was it required of Son of God to preach in Parables? Just like our modern day evangelists why not he spoke directly about the salvation? He said, Believe in me so that you will have eternal life. What is the reason he said this in the Temple or during festival feasts alone?

People in flesh would come to God with a specific need. They followed the Mosaic law to gather in the temple or synagogues, as a ritual. It is indeed true that they did not seek the Kingdom of God.

When Jesus spoke in Parables his Disciples asked him "Why are you speaking in Parables?" Jesus answers "The secrets of the Kingdom of God are made known to you. For those who are out there, it is hidden and told as Parables"

So, all should get everything was not Jesus' doctrine. Whatever one to be blessed with, one who was chosen by LORD, that blessing will be delivered.

In the Sower Parable, the seeds are same. The sower also did not wantedly put the seeds in rocky places or thorny bush. It is the capability to taje the seed and utilise it. We see even the good people produced 30, 60, 100 as per its capacity.

This is exacly what Paul says in 1 Corinthians 3:10-13

By the grace God has given me, I laid a foundation as a wise builder, and someone else is building on it. But each one should build with care. For no one can lay any foundation other than the one already laid, which is Jesus Christ. If anyone builds on this foundation using gold, silver, costly stones, wood, hay or straw, their work will be shown for what it is, because the Day will bring it to light. It will be revealed with fire, and the fire will test the quality of each person’s work.

What are you building with? Gold? Silver? Wood? Costly Stones or Hay  and Straw?

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 7

கேட்க வேண்டும் என்பதையா பேசுகிறீர்?


உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பேசும் போது உங்கள் பேச்சை கேட்க விரும்புபவர்கள் என்ன கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதை சொல்கிறீர்களா? அப்படி செய்தால் நீங்கள் ஒரு மாய்மால வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

முகஸ்துதி பாடுவோருக்கும் உங்களுக்கும் வித்தியாசமே இல்லை. 

இயேசு யாருக்கும் முகஸ்துதி செய்யவில்லை. பரிசேயர்களை நோக்கி உங்களுக்கு ஐயோ! என்று கடிந்து கொண்டவர். பிலாத்து தன் அதிகாரத்தை குறிக்கும் விதமாக, "உன்னை சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டு"  என்ற போது, ஆளுகையில் உள்ள பிலாத்துவை நோக்கி "பரத்திலிருந்து கொடுக்கப்பட்டாலொழிய உமக்கு என் மேல் அதிகாரம் இல்லை" என்று கூறுவதைக் காணுங்கள்.

அப்பிரயோஜனமான ஊழியக்காரர்


போதகர்களும், ஊழியம் செய்பவர்களும் மிகவும் உன்னிப்பாக இயேசுவின் வாழ்க்கையை கவனித்து அவரைப் போலவே வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு நிகழ்வை உருவகப் படுத்தி காணலாம்!

உங்களை தேவ ஆவியானவர் ஒரு சாலையில் நடந்து செல் என்று பணிக்கிறார். 

அவ்வழியே ஒரு ஆளுனரின் சீருந்து (கார்) செல்கிறது. அந்தக் காரில் ஏறி சுவிசேஷம் சொல் என்று சொல்கிறார். நீங்கள் செய்வீர்களா?

செய்தால் தேவனுடைய சித்தத்தை செய்தவர் நீங்கள்.

அப்போஸ்தல நடபடிகள் 8:26-40 படியுங்கள். பிலிப்பு தேவ சித்தத்தை செய்தான். எத்தியோப்பிய அண்ணகன் இரட்சிக்கப்பட்டான். அவன் "நான் எப்படி ராஜ பிரதாணியின் வாகனம் அருகே செல்ல முடியும்? அவன் இரதத்தில் உள்ள வீரர்கள் என்னைக் கொன்று போடுவார்களே" என்று சாக்கு போக்கு சொல்லவில்லை.

இயேசு சொல்கிறார்,  "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது."

நான் இதைச் செய்தேன், அங்கு சென்றேன் பிரசங்கித்தேன், ஊழியம் செய்தேன், சுவிசேஷம் அறிவித்தேன் என்று சொல்கிறீர்களா. அந்த வார்த்தைகளில் நான், றேன், தேன் மாற்றுங்கள். தேவன் என்ன செய்யச் சொல்கிறாரோ அதை மட்டுமே செய்து முடியுங்கள். செய்த பின்னர் இயேசு சொன்ன படியே

"உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்"

கர்த்தர் நமக்கு அருளிய கிருபைகளை நாளும் நினைவு கூர்வோம்.  

Monday, 7 November 2016

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 6

பிரசங்கமும் தேவ ஜனமும்.

ஆவியானவர் என் மூலம் செய்யும் பிரசங்கத்தில் அடிக்கடி சொல்லும் வாக்கியம் "தேவ வார்த்தையை புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் தலைக்கு மேல் போடப்படும் பவுன்ஸராக இருந்தால், குனிந்து விடுவது போல, தேவ வார்த்தையை விடக் கூடாது." ஆராதனை வேளையில் புரியவில்லை என்றால் தனி ஜெபத்தில் ஆண்டவரை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். இப்படி பவுன்ஸரைப் போல வரும் தேவ வார்த்தையை குனிந்து விட்டுவிட்டால் யாருக்கு நட்டம்? பறவைகள் புசித்துப் போடும் விதையாக தேவ வார்த்தை ஆகிறதே. ஆராதனையில் பிரசங்கம் செய்வது எதற்காக? தேவ வார்த்தை தேவ ஜனத்திற்கு எளிதில் உள்வாங்கி அவற்றை பயன் படுத்தும் படியாகவே அல்லவா? ஒரேயொரு வசனத்தைக் கொண்டு நாள் கணக்காக பிரசங்கம் செய்யலாம். ஒரே பிரசங்கத்தில் பலப்பல வசனங்களை மேற்கோள் காட்டியும் பிரசங்கம் செய்யலாம். போதகர்களே எப்படி பிரசங்கம் செய்கின்றீர்கள் என்பது முக்கியமல்ல. பிரசங்கம் கேட்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா என்பது மிகவும் முக்கியம். தேவ ஆவியானவர் பிரசங்கிக்கிறாரா, அல்லது உங்கள் மாம்சம் பிரசங்கிக்கிறதா?

இயேசு தன் வாழ்நாளில் ஒரே கருத்தை இரண்டு அல்லது மூன்று இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால் இவை யாவும் கேட்கும் மக்கள் பயனுறவே சொல்லி இருக்கிறார். ஒரே நாளில் ஒரே கருத்தைக் குறித்து வெவ்வேறு ஜனங்களுக்கு கூறவில்லை. அவரவரின் தேவையை புரிந்து கொண்டு அந்தப்படியே அவர் பிரசங்கித்தார். பல இடங்களில் வெளிப்படையாகவும், வேறு இடங்களில் உவமைகளாகவும் பிரசங்கித்தார். தேவ ஆவியானவருக்கு அந்தந்த ஆராதனைக்கு வரும் மக்களுக்கு என்ன தேவை என்று தெரியும். ஒவ்வொரு ஆராதனை வேளையிலும், தேவ ஆவியானவர் என்ன செய்தி கொடுக்க வேண்டும் என்று இருக்கிறாரோ அந்த செய்தி மட்டும் கொடுப்பவர்களே தேவனுடைய செய்தியை பகிர்கிறார்கள். மற்றவர்களின் பிரசங்கம் பவுன்ஸராக போவதே இயற்கை. இக்காரணத்தினாலேயே ஒரே நாளில் "பல ஆராதனைகள் ஒரே செய்தி" என்ற கோட்பாடில் ஒவ்வாமை.

ஒவ்வொரு ஆராதனைக்கும் தேவ செய்தி பிரசங்கிக்கப் படவேண்டும் என்பதை நியாயப்பிரமாணமாக இல்லாமல், தேவனை ஆராதிப்பதற்கு அந்த வேளையை, பயன்படுத்தி பாடல்கள் பாடலாம். சமீபத்தில் ஒரு சபைக்கு ஆவியானவர் வழிநடத்த சென்றேன். சென்ற போது ஜெப வேளை. ஒவ்வொருவரும் தனி ஜெபமாக ஏறெடுத்துக் கொண்டிருந்தனர். சபை போதகர் அந்த ஜெப வேளையிலே பிரசங்கத்திற்காக ஆயத்தமாவதை கவனித்தேன். நானும் ஆவியானவரிடம் அவ்வேளையை ஒப்புக் கொடுத்து ஜெபித்தேன். அப்போது தேவ ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தி ஒரு காரியத்தை அந்த போதகரிடம் சொல் என்று பணித்தார். தேவ ஆவியானவருக்கு கீழ்படிந்து சென்றேன். போதகரிடம் ஆவியானவர் சொன்னதை சொன்னேன். அவருக்கு சிறிது ஆச்சரியம். அவர் மனதில் "இவன் யார் என்னிடம் வந்து தேவன் உங்களிடம் சொல்லச் சொன்னார் என்று கூறுவதற்கு" என்று நினைத்து அவரிடம் கூறாமல் விட்டுவிடுவோர் பலர்.

ஆனால் அன்று நடந்தது வேறு. சில நிமிடங்களுக்குப் பின்னர் ஆராதனை தொடங்கியது. ஆராதனை முடிந்ததும் பிரசங்கத்தில் தேவ ஆவியானவர் என்ன எனக்கு வெளிப்படுத்தி, போதகருக்கு என்ன சொல்லச் சொன்னாரோ அந்த வார்த்தைகளே பிரசங்கத்தின் தலைப்பு!

ஆகவே, தேவன் என்ன சொல்ல விரும்புகிறாரோ அதையே தேவ ஜனத்திற்கு கொண்டு செல்லுங்கள். தேவன் என்ன செய்ய சொல்கிறாரோ அதையே செய்யுங்கள். தேவன் உங்களுக்கு சொல்வதை கீழ்படிந்து செய்வதால், சொல்வதால் அந்த வசனத்தில் ஜீவன் இருக்கும். வசனமே அழியாத விதை. தேவன் தாமே உங்களை மேலும் போதித்து வழிநடத்துவாராக. ஆமென்.