Friday, 11 November 2016

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 1

இயேசு ஊன் உருவம் எடுத்து இவ்வுலகில் வாழ்ந்த போது பல உபதேசங்களை கூறினார். அவைகளில் சில நம் வேதாகமத்தில் உள்ள நான்கு சுவிசேஷங்களில் உள்ளன. நாம் அவற்றை படித்து அவர் கூறிய உபதேசங்களை பின்பற்றி அவர் கூறியபடியே, அவரைப்போல பரிசுத்த வாழ்க்கை வாழவே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவன் நம் மீது கொண்டுள்ள அன்பு அளப்பெரியது. அந்த அன்பின் நிமித்தமே நாம் எல்லாரும் இன்னும் அழிந்து போகாமல் இருக்கிறோம். தேவன் அன்பாயிருக்கிறார். பிதாவாகிய தேவன் தன்னுடைய அன்பின் நீள அகல உயர ஆழத்தை நமக்கு வெளிப்படுத்த தன் குமாரனை அனுப்பினார்,

யோவான் 3:16ல் காண்கிறோம், தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

ஆங்கிலத்தில் இதே வசனம் முதலில் "இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" என்பது முதலில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்து பாவ நிவாரண பலியாக மரிப்பதற்காகவே, பாவமே அறியாத, குறையில்லா நிஷ்களங்கமான ஆட்டுக்குட்டியாக வாழ்ந்தவர் இயேசு.

இப்படிப்பட்ட நிஷ்களங்கமான இயேசு பிறந்தவுடன் மரிக்க வைத்து பாவ நிவாரணம் செய்திருக்கலாமே? ஏன் 30 வயது வரை வளர வைத்து, 3-1/2 வருடம் ஊழியம் செய்ய வைத்து பின் அவரை சிலுவையில் கைவிட்டு மரிக்க வைக்க வேண்டும்?

தியானியுங்கள். அடுத்த பதிவில் சில காரணங்களை காணலாம்.

Life of Christ Jesus - Part 1

Jesus when he lived in flesh in this world had told many teachings. Only a few of them we have in the canonised bible, recorded in the 4 Gospels. These are made available to us to read, follow the teachings and live a holy life like Jesus.

God's Love cannot be fathomed. Because of his everlasting love we are still not destroyed completely. God is Love. Hence God, the Father sent his only son to reveal us His love's length, breadth, height and depth. Unfathomable love we have.

In John 3:16 we read "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life."

He was sent to live a Holy life, as a lamb without any blemish, to be sacrificed on the Cross as atonement sacrifice. Jesus lived as a lamb without any blemish.

Why did not LORD god YHWH atone the sins of Mankind the moment Jesus was born? Why he allowed him to grow for 30 years, make him serve for 3-1/2 years and forsake him on the Cross to allow him die?

Meditate on this. See you in the next part.

Thursday, 10 November 2016

Self deed or do as per direction of Father?

LORD will speak to you through John 14.

Jesus said "the words that I speak unto you I speak not of myself: but the Father that dwelleth in me, he doeth the works."

So Jesus' deeds are done by Father. Whatever Father wanted him to perform Jesus did. Thats one of the primary reasons why his ministry withstood the times and still being talked about.

The next verse would have been a whiplash to the disciples. He said "Believe me that I am in the Father, and the Father in me: or else believe me for the very works' sake."

The next verse was a big promise to the believers

Verily, verily, I say unto you, He that believeth on me, the works that I do shall he do also; and greater works than these shall he do; because I go unto my Father.

Greater works than Jesus' works is promised for the believers. 

If we enlist Jesus' deeds we can group them as

He healed sick
He drove demons
He raised dead
He preached
He healed a born blind

and so on

of all deeds, he gave himself on the cross as a sacrificial lamb so that who ever believes in him shall not perish but have eternal life. Author of Salvation is Jesus alone.

He could say "Finished" on the cross, as he accomplished all that were commanded to him to be completed. Jesus dedicated himself to accomplish the will of the Father.


Jesus gave only one command. That's Love. He said
If a man love me, he will keep my words: and my Father will love him, and we will come unto him, and make our abode with him.

The Holy God in Trinity and Triune will make their abode in believer. For that only thing we need to do is to Love Him and Love one another.

The creator of Universe, the one who cannot be contained in the universe and heavens, will make His abode with the person who loves him. What a privilege!

If we say "The Father is in me" and do whatever our self wants to do, how will Father's will be accomplished? We need to give way for the  Holy Ghost, whom the Father had sent in Jesus name. He is capable of accomplishing things which even we could not imagine to accomplish. God is Able.

A Testimony

I was working in Dubai. That timeframe was good for me to grow in Spirit.

One Thursday night, I visited a brother in Christ's residence in Sharjah and we had dinner together. We went to sleep after a small supplication to the Father to accomplish his will through us.

The brother slept once he hit the bed. However I was in spirit the whole night. I am not sure if my flesh was sleeping or alert. In the Spirit I saw a woman in labour. I saw the child had complications with its umbilical chord surrounding its neck. What a state! the umbilical chord which was supposed to feed the baby is acting as a noose! Holy Spirit made me to untangle the umbilical chord. I obeyed.


I was in spirit till the delivery is completed through a Cesarean section. Once the delivery is completed, I came to senses and found that it was morning.

I shared this spiritual journey with the brother. He asked will such this happen? Are you a doctor? then I asked him, isn't my LORD able to do this? He agreed that God is Able.

Friday was holiday and returned to office on Saturday. One of the colleagues distributed sweets to the office co-workers stating that on Thursday night another colleague was blessed with a boy and the delivery happened with great complications. It happened in India.

The child's father returned to Dubai after few days and explained how the doctors lost hope as the baby had the umbilical chord around its neck for long time and a still born baby was a possibility. However after few hours during the scan they found the umbilical chord out of the neck and immediately performed C-Section.

I became stunned when he was explained these. I gave Glory to God. How LORD loves another soul! The child's parents were not believers in Christ. So in secret, I Praised the LORD for his love.

After a few days when I held the Child in my hands, I thanked the LORD profusely, in my heart. This child had come into the world because of the amazing grace of my LORD.

Like this when we allow the LORD to lead us, he performs miracles.

After this incident, many times I have gone in spirit and obeyed what the LORD had commanded. Most of the times, I have not got report of what happened. Whatever may be the case, I accomplished LORD's will, which is my food.

Self deeds will fail you. When we allow the Holy Spirit who had come in Jesus Name and sent by the heavenly Father to accomplish LORD's will, he will lead us to accomplish HIS will as a zealous child and at the end make us state "LORD we accomplished your will"

God is Able. Amen.

சுயமாகச் செய்வதா? பிதா செய்யச் சொல்லி செய்வதா?

யோவான் 14 மூலம் தேவ ஆவியானவர் இன்று பேசுவார்.

இயேசு சொன்னார் "நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்."

ஆக, இயேசு செய்த கிரியைகள் எல்லாம் பிதாவானவர் செய்து வந்திருக்கிறார். அதனாலேயே அவரின் ஊழியம் நிலைத்தது. அவரின் ஊழியம் இன்றும் பேசப்படுகிறது.

தொடர்ந்து பேசிய வசனம் சீஷர்களுக்கு சவுக்கடியாக இருந்திருக்கும்.

"நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்."

அதாவது தன்னை நம்பாவிட்டாலும் தான் செய்யும் கிரியைகள், அற்புதங்கள் நிமித்தமாக நம்புங்கள் என்கிறார் இயேசு.

அடுத்த வசனமோ மிகப் பெரிய வாக்குதத்தம்.

"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்."

இயேசுவின் விசுவாசிக்கு எப்பேர்பட்ட வாக்குதத்தம். இயேசு செய்த கிரியைகளையும், அவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

இயேசுவின் செய்த கிரியைகள் என்னவென்று பட்டியலிட்டோமென்றால் பலர் பலவிதமாக கூறுவர்.

நோய்களை சொஸ்தமாக்கினார்
பிசாசுகளை விரட்டினார்
மரித்தோரை எழுப்பினார்
போதனைகள் பலசெய்தார்
பிறவிக் குருடனை பார்வைப்பெற வைத்தார்

அடுக்கிக் கொண்டே போகலாம்.

எல்லா கிரியைகளை விட, அவர் தன் ஜீவனையே பலியாக கொடுத்தார். யார் யாரெல்லாம் அவரை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் எல்லாரும் நித்திய ஜீவனை அடைவர் என்ற மிகப்பெரிய வாக்குதத்தம் அவருக்குள் இருக்கிறதே. இரட்சிப்பு கொடுக்க வல்லவர் இயேசுவே.

சிலுவையில் "முடிந்தது" என்று கூறும்படி அவர் தனக்கு கட்டளையிட்டது எல்லாவற்றையும் செய்து முடித்தார். பிதாவானவர் தன் வாழ்க்கையில் என்ன செய்ய திட்டமிட்டிருந்தாரோ அதை செய்து முடிக்க இயேசு தன் வாழ்க்கையை அர்பணித்தார்.

இயேசு ஒரே கற்பனை தான் கூறுகிறார். அது அன்பு..  "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்."

பிதாவும், இயேசுவும், பரிசுத்த ஆவியும் உங்களில் வாசம் செய்வார்கள். எப்பேர்பட்ட சிலாக்கியம்! அண்டசராசரங்களும் வானங்களும் கொள்ளாத தேவன், நம்மில் வாசம் செய்கிறார்.

அவர் நம்மில் கிரியை செய்ய நாம் செய்ய வேண்டியது, அவரிடம் அன்பு கூறுவதே. அவரை அன்பு கூறுவது போல ஒருவரிலொருவர் அன்பு கூறுவதே. இப்படி அன்பை நாம் வெளிப்படுத்தினால் போதும். பிதாவானவர் நம்மில் கிரியை செய்ய இடம் தர வேண்டும்.

பிதா என்னில் இருக்கிறார் என்று சொல்லிவிட்டு உங்கள் சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தீர்களென்றால் பிதாவின் கிரியை எப்படி நடந்தேறும்? பிதாவின் சித்ததை செய்து முடிக்க இயேசுவின் நாமத்தில் பிதா அனுப்பிய பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை கிரியை செய்ய இடம் கொடுக்க வேண்டும்.

நமக்கு தெரியாத காரியங்களையும் நம் மூலம் செய்து முடிக்க வல்லவராக இருக்கிறார் கர்த்தர்.

ஒரு சிறிய சாட்சி

நான் துபாயில் வேலை செய்த காலம். ஆவியில் வளர அந்த காலம் எனக்கு மிக நன்றாக இருந்தது. ஒரு வியாழன், ஷார்ஜாவில் ஒரு கிறிஸ்துவிற்குள் சகோதரனின் வீட்டில் இரவு உணவு உட்கொண்டுவிட்டு தூங்கச் சென்றோம். தூங்கும் முன்னர் கர்த்தரின் சமூகத்தில் சென்று அவர் சித்தம் எங்களில் நிறைவேற ஒப்புக் கொடுத்தோம். சகோதரர் படுத்தவுடன் உறங்கிவிட்டார். நானோ
அன்றிரவு முழுவதும் ஆவியில் விழித்திருந்தேன். என் மாம்சம் தூங்கியதா இல்லையா தெரியாது. ஆவியில் ஒரு பிள்ளை பேறு நடை பெறுவதைக் கண்டேன். அந்த சிசுவின் கழுத்தைச் சுற்றி தொப்புள்கொடி. அந்த சிசுவிற்கு ஊட்டம் அளிக்க வேண்டிய தொப்புள் கொடியே அதற்கு தூக்கு போட்டது போல சுற்றிக்கொண்டது வியப்பாக இருந்தது. ஆவியானவர் என்னை பணிக்க அந்த தொப்புள் கொடியை மெதுவாக எடுத்து விட்டேன்.

இந்த ஆவியின் செயல் முழுவதும் முடிந்து பிள்ளைப்பேறு சிசேரியன் மூலம் நிறைவேறவும் நினைவு வந்தது. பொழுது விடிந்திருக்கக் கண்டேன்.. உடலில் ஒரு அசதியும் இல்லை. உற்சாகமாக எழுந்தேன். அந்த நிகழ்வை அந்த சகோதரனிடம் பகிர்ந்தேன். அவருக்கு ஆச்சரியம். இப்படியும் நடக்குமா? நீ என்ன டாக்டரா? என்று கேட்டார். கர்த்தரால் முடியும் தானே என்றேன். அவர் ஒப்புக்கொண்டார்.

வெள்ளிக்கிழமை விடுமுறை முடிந்து சனிக்கிழமை அலுவலகம் சென்றேன். அங்கு சகஊழியர் ஒருவர் இனிப்பு வழங்கினார். வியாழன் இரவு மற்றொரு சகஊழியருக்கு இந்தியாவில் ஆண்குழந்தை பிறந்ததாகவும், அந்த ஆண்குழந்தை மிகவும் பிரச்சனையான பிரசவம் நடந்து பிறந்ததாகவும் கூறினார்.

குழந்தையின் தந்தை சில நாட்களுக்கு பின் துபாய் வந்தார். வந்தவர் நடைப்பெற்ற பிரசவம் குறித்து மிக ஆச்சரியமாக விளக்கிக் கூறினார். சிசுவின் கழுத்தைச் சுற்றி தொப்புள்கொடி மிக நேரமாக இருந்ததால் குழந்தை இறந்து பிறக்கும் என்று மருத்துவர்கள் கைவிட்டனராம். ஆனால் சில மணிநேரத்திற்கு பிறகு தொப்புள் கொடி தானாகவே கழுத்திலிருந்து அவிழ்ந்ததாம். அவிழ்ந்ததைக் கண்டவுடன் சிசேரியன் செய்தார்களாம்.

அந்த நிகழ்வை கேட்டதும் புல்லரித்துப் போனேன். தேவன் ஒரு ஆத்துமாவை எப்படி நேசிக்கிறார் என்று புரிந்தது. அந்த ஆண்குழந்தையின் பெற்றோர் கிறிஸ்துவை அறியாதவர்களே. கர்த்தரை ஸ்தோத்தரித்து அவருக்கே நான் மகிமை செலுத்தினேன். அந்த ஆண்குழந்தையை சில நாட்கள் கழித்து என் கைகளில் ஏந்தியபோது யாருக்கும் தெரியாமல் என் தேவனை ஸ்தோத்தரித்தேன். என் தேவன் ஆச்சரியமாய் அனுகூலம் செய்து பிறப்பித்த குழந்தையல்லவா!

ஆகவே இது போல ஆவியானவர் உங்களை முழுதுமாக வழிநடத்த ஒப்புக் கொடுக்கும் போது அற்புதங்களை கர்த்தர் செய்கிறார்.

இந்நிகழ்வின் பிறகு இப்படிபட்ட ஆவிக்குரிய காரியங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. பலவற்றிற்கு நிகழ்வின் விளக்கம், சொன்ன சாட்சியின் விளக்கம் போல் வந்ததில்லை. வராவிட்டால் என்ன! என் தேவனின் சித்தத்தை செய்வது தானே என் போஜனம்!

சுயசித்தம் நம்மை வீழ்த்தும். தேவ சித்தத்தை செய்ய இயேசுவின் நாமத்தில் பிதாவானவர் அனுப்பிய ஆவியானவருக்கு ஒப்புக்கொடுப்போம். அவரே நம்மை வழிநடுத்தி பிதாவின் சித்தத்தை நம் வாழ்வில் செய்ய ஒப்புக் கொடுப்போம். நம் வாழ்க்கையிலும் "பிதாவே உம் சித்தத்தை முழுவதுமாக செய்து முடித்தோம்"  என்று சொல்லும் படியாக தேவ ஆவியானவருக்குக் கீழ்படிந்து வைராக்கியமாக தேவ சித்தத்தை செய்யும் பிள்ளைகளாக இருப்போம். ஆமென்.

Wednesday, 9 November 2016

பலமான ஆகாரத்தையல்ல பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்

அன்பான ஒலிவமலை பயனர்களே

இந்த குழுவில் ஆவியானவர் பதிவு செய்யும் பகுதிகள் சிறு பிள்ளைக்கு அளிக்கும் பால் போன்றது. இவைகளில் பல எமக்கு முன்பே தெரிந்திருந்தாலும் அஸ்திவாரம் நல்ல ஸ்திரமானதாக இருக்க நாம் இவைகளை அறிவது நலமே.

மற்றோருக்கு சத்திய ஆவியானவர் சொல்வது

எபிரெயர் 5:12-14

காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.

Milk not Solid food

Dear MOOCLL members

The articles shared in this forum are rudimentary and practicable in daily life. For the Lord has started giving milk to you, instead of solid food.

If you wonder why you get milk and all these teachings are well known to us, it is always better to go back to the basics and strengthen the foundation.

For many though, this is what spirit of truth declares

Hebrews 5:12-14
For although by this time you should be teachers, you again need to have someone teach you the rudiments of the first principles of the revelations of God. You have come to need milk, and not solid food. For everyone who lives on milk is not experienced in the word of righteousness, for he is a baby. But solid food is for those who are full grown, who by reason of use have their senses exercised to discern good and evil.


ஜீவாத்துமா (வாழ்வுடையோன்).

தேவன் நம்மை படைத்த போது ஜீவாத்துமாவாக படைத்தார். ஆதியாகமத்திலே மனிதனை படைத்த போது, மண்ணை வைத்து ஓர் உருவம் செய்து தன் சுவாசத்தை ஊதினார். மனிதன் ஜீவாத்துமா ஆனான். இப்படி படைத்த தேவன், ஒரு குறிப்பிட்ட கனியை புசிக்காதே என்று கூறியிருந்தார். ஆதாமும் ஏவாளும் கீழ்படியாமல் புசித்ததால் சாவு உலகிற்குள் வந்தது.
சதுசேயர்கள் இயேசுவை உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்க, சோதிக்கும் போது இயேசு தரும் விடையின் முடிவில்
லூக்கா  20:38. ...எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.
இயேசு இவ்வுலகில் மாம்சத்தில் ஊழியம் செய்த போது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய மூவரும் உலகப் பிரகாரமான மரித்திருந்தனர். ஆனால் இயேசு கிறிஸ்து அவர்கள் பெயரை கூறி, ஜீவனுள்ளோர் என்று குறிப்பிட்டார்.

லாசரு, ஐஸ்வர்யவான் கதையிலும் இருவரும் உலகத்திற்கு மரித்து அவர்களின் மாமிச உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவர்களில் லாசருவை பரலோகத்தில் ஆபிரகாம் மடியில் தேவ தாதர் விடுகிறார்கள். ஐஸ்வர்யவானோ நரகத்தில் வேதனைப் படுகிறான். இங்கு மூவருமே சாகாதிருப்பதை கவனிக்க வேண்டும்.

மாமிச உடல் அழிந்தாலும், ஆத்துமா அழியாது இருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாக இயேசு கிறிஸ்து திரும்ப வரப் போகிறார். அவரவர் செய்த கிரியைக்கு ஏற்றதாக பலனளிப்பார்.

ஆனாலும் மத்தேயு 7ல் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்தேயு 7:21-23 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவாகி உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவாகி என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

வாழும் மனிதரையும், 'மரித்த' மனிதரையும் நியாயந்தீர்க்க இயேசு விரைவில் வருகிறார். அவர் வரும் போது தேவ பிள்ளைகளாக, பிதாவின் சித்தத்தை செய்து முடித்தவர்களாக இருப்போமா?

அவர் நாமத்தினாலே பிசாசை துரத்துவதும், அவர் நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைப்பதும் பிதாவின் சித்தம் இல்லையெனில் அவை அக்கிரமச்செயல்!

ஒர் ஆழ்ந்த கருத்து இந்த வசனத்தில் உள்ளது. தேவனுக்கு ப்ரீதியான வாழ்க்கை வாழுங்கள். எந்த வேலையைத் தொடங்கும் முன் பிதாவின் சித்தம் தானா என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நமக்குள் வாசமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரை கேட்டு, அவர் வழிநடத்துதலின் படி நடப்பதே நல்லது.

இயேசுவே உயிர்ப்பிக்கிறவர்...

யோவான் 5:21-23
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.

சத்திய ஆவியானவர் தாமே உங்களை மேலும் வழிநடத்துவாராக. ஆமென்.