தேவன் நம்மை படைத்த போது ஜீவாத்துமாவாக படைத்தார். ஆதியாகமத்திலே மனிதனை படைத்த போது, மண்ணை வைத்து ஓர் உருவம் செய்து தன் சுவாசத்தை ஊதினார். மனிதன் ஜீவாத்துமா ஆனான். இப்படி படைத்த தேவன், ஒரு குறிப்பிட்ட கனியை புசிக்காதே என்று கூறியிருந்தார். ஆதாமும் ஏவாளும் கீழ்படியாமல் புசித்ததால் சாவு உலகிற்குள் வந்தது.
சதுசேயர்கள் இயேசுவை உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்க, சோதிக்கும் போது இயேசு தரும் விடையின் முடிவில்
லூக்கா 20:38. ...எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.
இயேசு இவ்வுலகில் மாம்சத்தில் ஊழியம் செய்த போது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய மூவரும் உலகப் பிரகாரமான மரித்திருந்தனர். ஆனால் இயேசு கிறிஸ்து அவர்கள் பெயரை கூறி, ஜீவனுள்ளோர் என்று குறிப்பிட்டார்.
லாசரு, ஐஸ்வர்யவான் கதையிலும் இருவரும் உலகத்திற்கு மரித்து அவர்களின் மாமிச உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவர்களில் லாசருவை பரலோகத்தில் ஆபிரகாம் மடியில் தேவ தாதர் விடுகிறார்கள். ஐஸ்வர்யவானோ நரகத்தில் வேதனைப் படுகிறான். இங்கு மூவருமே சாகாதிருப்பதை கவனிக்க வேண்டும்.
மாமிச உடல் அழிந்தாலும், ஆத்துமா அழியாது இருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாக இயேசு கிறிஸ்து திரும்ப வரப் போகிறார். அவரவர் செய்த கிரியைக்கு ஏற்றதாக பலனளிப்பார்.
ஆனாலும் மத்தேயு 7ல் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்தேயு 7:21-23 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவாகி உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவாகி என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
வாழும் மனிதரையும், 'மரித்த' மனிதரையும் நியாயந்தீர்க்க இயேசு விரைவில் வருகிறார். அவர் வரும் போது தேவ பிள்ளைகளாக, பிதாவின் சித்தத்தை செய்து முடித்தவர்களாக இருப்போமா?
அவர் நாமத்தினாலே பிசாசை துரத்துவதும், அவர் நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைப்பதும் பிதாவின் சித்தம் இல்லையெனில் அவை அக்கிரமச்செயல்!
ஒர் ஆழ்ந்த கருத்து இந்த வசனத்தில் உள்ளது. தேவனுக்கு ப்ரீதியான வாழ்க்கை வாழுங்கள். எந்த வேலையைத் தொடங்கும் முன் பிதாவின் சித்தம் தானா என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நமக்குள் வாசமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரை கேட்டு, அவர் வழிநடத்துதலின் படி நடப்பதே நல்லது.
இயேசுவே உயிர்ப்பிக்கிறவர்...
யோவான் 5:21-23
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.
சத்திய ஆவியானவர் தாமே உங்களை மேலும் வழிநடத்துவாராக. ஆமென்.
சதுசேயர்கள் இயேசுவை உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்க, சோதிக்கும் போது இயேசு தரும் விடையின் முடிவில்
லூக்கா 20:38. ...எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.
இயேசு இவ்வுலகில் மாம்சத்தில் ஊழியம் செய்த போது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய மூவரும் உலகப் பிரகாரமான மரித்திருந்தனர். ஆனால் இயேசு கிறிஸ்து அவர்கள் பெயரை கூறி, ஜீவனுள்ளோர் என்று குறிப்பிட்டார்.
லாசரு, ஐஸ்வர்யவான் கதையிலும் இருவரும் உலகத்திற்கு மரித்து அவர்களின் மாமிச உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவர்களில் லாசருவை பரலோகத்தில் ஆபிரகாம் மடியில் தேவ தாதர் விடுகிறார்கள். ஐஸ்வர்யவானோ நரகத்தில் வேதனைப் படுகிறான். இங்கு மூவருமே சாகாதிருப்பதை கவனிக்க வேண்டும்.
மாமிச உடல் அழிந்தாலும், ஆத்துமா அழியாது இருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாக இயேசு கிறிஸ்து திரும்ப வரப் போகிறார். அவரவர் செய்த கிரியைக்கு ஏற்றதாக பலனளிப்பார்.
ஆனாலும் மத்தேயு 7ல் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்தேயு 7:21-23 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவாகி உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவாகி என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
வாழும் மனிதரையும், 'மரித்த' மனிதரையும் நியாயந்தீர்க்க இயேசு விரைவில் வருகிறார். அவர் வரும் போது தேவ பிள்ளைகளாக, பிதாவின் சித்தத்தை செய்து முடித்தவர்களாக இருப்போமா?
அவர் நாமத்தினாலே பிசாசை துரத்துவதும், அவர் நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைப்பதும் பிதாவின் சித்தம் இல்லையெனில் அவை அக்கிரமச்செயல்!
ஒர் ஆழ்ந்த கருத்து இந்த வசனத்தில் உள்ளது. தேவனுக்கு ப்ரீதியான வாழ்க்கை வாழுங்கள். எந்த வேலையைத் தொடங்கும் முன் பிதாவின் சித்தம் தானா என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நமக்குள் வாசமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரை கேட்டு, அவர் வழிநடத்துதலின் படி நடப்பதே நல்லது.
இயேசுவே உயிர்ப்பிக்கிறவர்...
யோவான் 5:21-23
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.
சத்திய ஆவியானவர் தாமே உங்களை மேலும் வழிநடத்துவாராக. ஆமென்.
No comments:
Post a Comment