Monday, 7 November 2016

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 3

மத்தேயு, மாற்கு சுவிசேஷங்களில் இயேசு முதன் முறையாக பிரசங்கித்தவை என்ன தெரியுமா?

மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது மத்தேயு 4:17

காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் (மாற்கு 1:15)

லூக்கா சுவிசேஷத்தில் இயேசுவின் முதல் பிரசங்கம் ஏசாயா தீர்க்கதரிசன வார்த்தைகளை படித்து விட்டு

லூக்கா 4:18-21 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.

மூன்றிலும் சுவிசேஷம் (நற்செய்தி) கூறியே இயேசு தன் ஊழியத்தை தொடங்கியதாக காண்கிறோம். யோவான் சுவிசேஷத்திலோ முதல் பிரசங்கம் நிக்கதேமூ சந்திப்பில் நடப்பதைக்க் காண்கிறோம்.. அங்கும் மறுபடி பிறத்தல் குறித்த பிரசங்கமே செய்கிறார்.

பரலோக ராஜ்யம், தேவனுடைய ராஜ்யம் என்ன வித்தியாசம்?
இரண்டுமே ஒன்றா? வேறா? அடுத்த பதிவில்

No comments:

Post a Comment