பிரசங்கமும் தேவ ஜனமும்.
ஆவியானவர் என் மூலம் செய்யும் பிரசங்கத்தில் அடிக்கடி சொல்லும் வாக்கியம் "தேவ வார்த்தையை புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் தலைக்கு மேல் போடப்படும் பவுன்ஸராக இருந்தால், குனிந்து விடுவது போல, தேவ வார்த்தையை விடக் கூடாது." ஆராதனை வேளையில் புரியவில்லை என்றால் தனி ஜெபத்தில் ஆண்டவரை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். இப்படி பவுன்ஸரைப் போல வரும் தேவ வார்த்தையை குனிந்து விட்டுவிட்டால் யாருக்கு நட்டம்? பறவைகள் புசித்துப் போடும் விதையாக தேவ வார்த்தை ஆகிறதே. ஆராதனையில் பிரசங்கம் செய்வது எதற்காக? தேவ வார்த்தை தேவ ஜனத்திற்கு எளிதில் உள்வாங்கி அவற்றை பயன் படுத்தும் படியாகவே அல்லவா? ஒரேயொரு வசனத்தைக் கொண்டு நாள் கணக்காக பிரசங்கம் செய்யலாம். ஒரே பிரசங்கத்தில் பலப்பல வசனங்களை மேற்கோள் காட்டியும் பிரசங்கம் செய்யலாம். போதகர்களே எப்படி பிரசங்கம் செய்கின்றீர்கள் என்பது முக்கியமல்ல. பிரசங்கம் கேட்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா என்பது மிகவும் முக்கியம். தேவ ஆவியானவர் பிரசங்கிக்கிறாரா, அல்லது உங்கள் மாம்சம் பிரசங்கிக்கிறதா?
இயேசு தன் வாழ்நாளில் ஒரே கருத்தை இரண்டு அல்லது மூன்று இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால் இவை யாவும் கேட்கும் மக்கள் பயனுறவே சொல்லி இருக்கிறார். ஒரே நாளில் ஒரே கருத்தைக் குறித்து வெவ்வேறு ஜனங்களுக்கு கூறவில்லை. அவரவரின் தேவையை புரிந்து கொண்டு அந்தப்படியே அவர் பிரசங்கித்தார். பல இடங்களில் வெளிப்படையாகவும், வேறு இடங்களில் உவமைகளாகவும் பிரசங்கித்தார். தேவ ஆவியானவருக்கு அந்தந்த ஆராதனைக்கு வரும் மக்களுக்கு என்ன தேவை என்று தெரியும். ஒவ்வொரு ஆராதனை வேளையிலும், தேவ ஆவியானவர் என்ன செய்தி கொடுக்க வேண்டும் என்று இருக்கிறாரோ அந்த செய்தி மட்டும் கொடுப்பவர்களே தேவனுடைய செய்தியை பகிர்கிறார்கள். மற்றவர்களின் பிரசங்கம் பவுன்ஸராக போவதே இயற்கை. இக்காரணத்தினாலேயே ஒரே நாளில் "பல ஆராதனைகள் ஒரே செய்தி" என்ற கோட்பாடில் ஒவ்வாமை.
ஒவ்வொரு ஆராதனைக்கும் தேவ செய்தி பிரசங்கிக்கப் படவேண்டும் என்பதை நியாயப்பிரமாணமாக இல்லாமல், தேவனை ஆராதிப்பதற்கு அந்த வேளையை, பயன்படுத்தி பாடல்கள் பாடலாம். சமீபத்தில் ஒரு சபைக்கு ஆவியானவர் வழிநடத்த சென்றேன். சென்ற போது ஜெப வேளை. ஒவ்வொருவரும் தனி ஜெபமாக ஏறெடுத்துக் கொண்டிருந்தனர். சபை போதகர் அந்த ஜெப வேளையிலே பிரசங்கத்திற்காக ஆயத்தமாவதை கவனித்தேன். நானும் ஆவியானவரிடம் அவ்வேளையை ஒப்புக் கொடுத்து ஜெபித்தேன். அப்போது தேவ ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தி ஒரு காரியத்தை அந்த போதகரிடம் சொல் என்று பணித்தார். தேவ ஆவியானவருக்கு கீழ்படிந்து சென்றேன். போதகரிடம் ஆவியானவர் சொன்னதை சொன்னேன். அவருக்கு சிறிது ஆச்சரியம். அவர் மனதில் "இவன் யார் என்னிடம் வந்து தேவன் உங்களிடம் சொல்லச் சொன்னார் என்று கூறுவதற்கு" என்று நினைத்து அவரிடம் கூறாமல் விட்டுவிடுவோர் பலர்.
ஆனால் அன்று நடந்தது வேறு. சில நிமிடங்களுக்குப் பின்னர் ஆராதனை தொடங்கியது. ஆராதனை முடிந்ததும் பிரசங்கத்தில் தேவ ஆவியானவர் என்ன எனக்கு வெளிப்படுத்தி, போதகருக்கு என்ன சொல்லச் சொன்னாரோ அந்த வார்த்தைகளே பிரசங்கத்தின் தலைப்பு!
ஆகவே, தேவன் என்ன சொல்ல விரும்புகிறாரோ அதையே தேவ ஜனத்திற்கு கொண்டு செல்லுங்கள். தேவன் என்ன செய்ய சொல்கிறாரோ அதையே செய்யுங்கள். தேவன் உங்களுக்கு சொல்வதை கீழ்படிந்து செய்வதால், சொல்வதால் அந்த வசனத்தில் ஜீவன் இருக்கும். வசனமே அழியாத விதை. தேவன் தாமே உங்களை மேலும் போதித்து வழிநடத்துவாராக. ஆமென்.
ஆவியானவர் என் மூலம் செய்யும் பிரசங்கத்தில் அடிக்கடி சொல்லும் வாக்கியம் "தேவ வார்த்தையை புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் தலைக்கு மேல் போடப்படும் பவுன்ஸராக இருந்தால், குனிந்து விடுவது போல, தேவ வார்த்தையை விடக் கூடாது." ஆராதனை வேளையில் புரியவில்லை என்றால் தனி ஜெபத்தில் ஆண்டவரை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். இப்படி பவுன்ஸரைப் போல வரும் தேவ வார்த்தையை குனிந்து விட்டுவிட்டால் யாருக்கு நட்டம்? பறவைகள் புசித்துப் போடும் விதையாக தேவ வார்த்தை ஆகிறதே. ஆராதனையில் பிரசங்கம் செய்வது எதற்காக? தேவ வார்த்தை தேவ ஜனத்திற்கு எளிதில் உள்வாங்கி அவற்றை பயன் படுத்தும் படியாகவே அல்லவா? ஒரேயொரு வசனத்தைக் கொண்டு நாள் கணக்காக பிரசங்கம் செய்யலாம். ஒரே பிரசங்கத்தில் பலப்பல வசனங்களை மேற்கோள் காட்டியும் பிரசங்கம் செய்யலாம். போதகர்களே எப்படி பிரசங்கம் செய்கின்றீர்கள் என்பது முக்கியமல்ல. பிரசங்கம் கேட்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா என்பது மிகவும் முக்கியம். தேவ ஆவியானவர் பிரசங்கிக்கிறாரா, அல்லது உங்கள் மாம்சம் பிரசங்கிக்கிறதா?
இயேசு தன் வாழ்நாளில் ஒரே கருத்தை இரண்டு அல்லது மூன்று இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால் இவை யாவும் கேட்கும் மக்கள் பயனுறவே சொல்லி இருக்கிறார். ஒரே நாளில் ஒரே கருத்தைக் குறித்து வெவ்வேறு ஜனங்களுக்கு கூறவில்லை. அவரவரின் தேவையை புரிந்து கொண்டு அந்தப்படியே அவர் பிரசங்கித்தார். பல இடங்களில் வெளிப்படையாகவும், வேறு இடங்களில் உவமைகளாகவும் பிரசங்கித்தார். தேவ ஆவியானவருக்கு அந்தந்த ஆராதனைக்கு வரும் மக்களுக்கு என்ன தேவை என்று தெரியும். ஒவ்வொரு ஆராதனை வேளையிலும், தேவ ஆவியானவர் என்ன செய்தி கொடுக்க வேண்டும் என்று இருக்கிறாரோ அந்த செய்தி மட்டும் கொடுப்பவர்களே தேவனுடைய செய்தியை பகிர்கிறார்கள். மற்றவர்களின் பிரசங்கம் பவுன்ஸராக போவதே இயற்கை. இக்காரணத்தினாலேயே ஒரே நாளில் "பல ஆராதனைகள் ஒரே செய்தி" என்ற கோட்பாடில் ஒவ்வாமை.
ஒவ்வொரு ஆராதனைக்கும் தேவ செய்தி பிரசங்கிக்கப் படவேண்டும் என்பதை நியாயப்பிரமாணமாக இல்லாமல், தேவனை ஆராதிப்பதற்கு அந்த வேளையை, பயன்படுத்தி பாடல்கள் பாடலாம். சமீபத்தில் ஒரு சபைக்கு ஆவியானவர் வழிநடத்த சென்றேன். சென்ற போது ஜெப வேளை. ஒவ்வொருவரும் தனி ஜெபமாக ஏறெடுத்துக் கொண்டிருந்தனர். சபை போதகர் அந்த ஜெப வேளையிலே பிரசங்கத்திற்காக ஆயத்தமாவதை கவனித்தேன். நானும் ஆவியானவரிடம் அவ்வேளையை ஒப்புக் கொடுத்து ஜெபித்தேன். அப்போது தேவ ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தி ஒரு காரியத்தை அந்த போதகரிடம் சொல் என்று பணித்தார். தேவ ஆவியானவருக்கு கீழ்படிந்து சென்றேன். போதகரிடம் ஆவியானவர் சொன்னதை சொன்னேன். அவருக்கு சிறிது ஆச்சரியம். அவர் மனதில் "இவன் யார் என்னிடம் வந்து தேவன் உங்களிடம் சொல்லச் சொன்னார் என்று கூறுவதற்கு" என்று நினைத்து அவரிடம் கூறாமல் விட்டுவிடுவோர் பலர்.
ஆனால் அன்று நடந்தது வேறு. சில நிமிடங்களுக்குப் பின்னர் ஆராதனை தொடங்கியது. ஆராதனை முடிந்ததும் பிரசங்கத்தில் தேவ ஆவியானவர் என்ன எனக்கு வெளிப்படுத்தி, போதகருக்கு என்ன சொல்லச் சொன்னாரோ அந்த வார்த்தைகளே பிரசங்கத்தின் தலைப்பு!
ஆகவே, தேவன் என்ன சொல்ல விரும்புகிறாரோ அதையே தேவ ஜனத்திற்கு கொண்டு செல்லுங்கள். தேவன் என்ன செய்ய சொல்கிறாரோ அதையே செய்யுங்கள். தேவன் உங்களுக்கு சொல்வதை கீழ்படிந்து செய்வதால், சொல்வதால் அந்த வசனத்தில் ஜீவன் இருக்கும். வசனமே அழியாத விதை. தேவன் தாமே உங்களை மேலும் போதித்து வழிநடத்துவாராக. ஆமென்.
No comments:
Post a Comment