Sunday, 6 November 2016

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 1

இயேசு ஊன் உருவம் எடுத்து இவ்வுலகில் வாழ்ந்த போது பல உபதேசங்களை கூறினார். அவைகளில் சில நம் வேதாகமத்தில் உள்ள நான்கு சுவிசேஷங்களில் உள்ளன. நாம் அவற்றை படித்து அவர் கூறிய உபதேசங்களை பின்பற்றி அவர் கூறியபடியே, அவரைப்போல பரிசுத்த வாழ்க்கை வாழவே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவன் நம் மீது கொண்டுள்ள அன்பு அளப்பெரியது. அந்த அன்பின் நிமித்தமே நாம் எல்லாரும் இன்னும் அழிந்து போகாமல் இருக்கிறோம். தேவன் அன்பாயிருக்கிறார். பிதாவாகிய தேவன் தன்னுடைய அன்பின் நீள அகல உயர ஆழத்தை நமக்கு வெளிப்படுத்த தன் குமாரனை அனுப்பினார்,

யோவான் 3:16ல் காண்கிறோம், தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

ஆங்கிலத்தில் இதே வசனம் முதலில் "இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" என்பது முதலில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்து பாவ நிவாரண பலியாக மரிப்பதற்காகவே, பாவமே அறியாத, குறையில்லா நிஷ்களங்கமான ஆட்டுக்குட்டியாக வாழ்ந்தவர் இயேசு.

இப்படிப்பட்ட நிஷ்களங்கமான இயேசு பிறந்தவுடன் மரிக்க வைத்து பாவ நிவாரணம் செய்திருக்கலாமே? ஏன் 30 வயது வரை வளர வைத்து, 3-1/2 வருடம் ஊழியம் செய்ய வைத்து பின் அவரை சிலுவையில் கைவிட்டு மரிக்க வைக்க வேண்டும்?

தியானியுங்கள். அடுத்த பதிவில் சில காரணங்களை காணலாம்.  

No comments:

Post a Comment