Wednesday, 9 November 2016

செல்லாத நோட்டுக்கள்

இன்றிரவு (8 Oct 2016) 12 மணி முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று திரு நரேந்திர மோடி அறிவிப்பு.

இதன் காரணமாக மிகவும் நெருக்கடியான நிலையில் பல மக்கள் உள்ளனர். சில கரன்சி நோட்டுக்களை வைத்துள்ள மக்களும் பதற்றமாக இருக்க காரணம், அவர்களின் இருதயம் அவர்களின் பொக்கிஷம் இருக்கும் இடத்தில் உள்ளது.

இயேசு கிறிஸ்து சொன்ன படியே, பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள்.

இந்த முடிவு சடுதியில் வந்ததென மக்கள் கூறுகின்றனர். முடிவுகள் சடுதியில் வரக்கூடியதென்று இந்த நிகழ்வைக் கொண்டு அறியலாம்.

காலம் மிக விரைவில் வருகிறது மக்களே.... பிசாசின் முத்திரையான 666 என்ற இலக்கத்தை ஒப்புக் கொள்ளாதவன் வணிகம் செய்ய முடியாது என்ற நிலை வரும் என்று நம் வேதாகமத்தில் உள்ளது.

தேவன் உங்களையும் என்னையும் முன்குறித்து இரகசியங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். முன்குறிக்கப்பட்டும் சத்தியம் அறியாத மக்கள், சத்தியம் அறியும்படி நாம் ஜெபித்து, அவர்களுக்கு ஆவியானவர் வழிநடத்தும் படியே கீழ்படிந்து அவர்களுக்கு சத்தியத்தை அறிவியுங்கள். இவையெல்லாம் நம் மீட்பர்  விரைவில் திரும்ப   வருவதற்கான அறிகுறிகள்.

வாரும் இயேசுவே. விரைவில் வாரும். ஆமென்.

No comments:

Post a Comment